Sunday, March 21, 2010

வாழ்வின் ஆச்சர்யங்கள்

அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும்
ஆச்சர்யம் இவ்வுலகில் ஏராளம் தான்

உன் மேல் நான் காதல் கொண்டதும்
நீ என் காதலை மறுத்ததும்
அப்படியே....

Friday, March 19, 2010

இது சத்தியம்

உன்னுடன் பழகிய நினைவுகளை என்றும் என் இதயத்தில்
சுமந்து கொண்டிருப்பேன் ...
இது வெறும் வார்த்தையல்ல சத்தியம்!!!

என்னுள் நீ..

என் உயிரே என்றும் நீ என்னுள் இருக்கிறாய்
நீ எனக்கே உரியவள்
நீ எங்கு சென்றாலும் எவரோடு இருந்தாலும்
என் இதயத்தில் இருக்கும் உன்னை எவராலும்
பிரிக்க முடியாது
ஏன் நீயே நினைத்தாலும்.....

இது நியாயமா?

பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று
உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

நிலவின் ஒளியை அருகிலேயே கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தை காணும் போதெல்லாம்

கிளி என் செவியினில் அமர்ந்த அனுபவம் கண்டேன்
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்

காலம் நின்று விட கூடாதா என்று எண்ணியும் உள்ளேன்
நீ என் அருகில் இருக்கும் பொழுது

நரகத்தையே காட்டி விட்டாயே
என்னை விட்டு பிரிந்த போது.....

இது நியாயமா?

Thursday, March 18, 2010

காதல் என்றால் என்ன?

நண்பர்களே காதல் என்றால் என்ன ?
என்னை பொருந்தவரையில் அன்பு என்பதே காதல்.

அன்பே சிவம் என்பது போல் அன்பே காதல்
கவர்ச்சியினால் வருவது காதல் அல்ல
காம உணர்ச்சியினால் வருவதும் காதல் அல்ல
கள்ளமில்லா அன்பினால் வருவதே காதல்

காதலில் பெரும் வெற்றியை விட
காதல் கொள்வதே ஆனந்தமாகும்!!

என்னுள் அவள் இருக்கிறாள் என்ற நிம்மதியே
காதல் ஆகும்.

அவள் என்னிடம் பேசாமல் இருக்கலாம்
அவள் என்னை கண்டு ஒன்றும் தோணவில்லை என்று சொல்லலாம்
அவள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்
அவள் எப்படி பட்டவளாக இருந்தாலும்

அவள் மேல் உள்ள அன்பு சற்றும் குறையாது
என்ற வைராக்கியம் இருபவனின்
காதல் உண்மையானது
அவன் அன்பு உண்மையானது
இது சத்தியம் !!

Tuesday, March 16, 2010

உன்னை பற்றிய கவிதை

என் கண்கள் உன்னை தவிர வேறு எதையும் காண வில்லை
என் மனமும் உன்னை தவிர வேறு எதையும் நினைக்கவில்லை
இன்னும் எனக்கு நம்பிக்கை உண்டடி என் அன்பை நீ புரிந்து
கொள்வாய் என்று ...

Thursday, March 11, 2010

தூக்கத்திலும் நீயே

"தூங்கி விடலாம் என்று நினைத்தால்
கனவில் வந்து கொள்ளுகிராயே..

விழித்து கொண்டிருந்தால் கண் இமைகளில்
நின்று கொண்டிருகிராயே.."

எது ஆனந்தம்

புண்ணிய பலனோ பாவ பலனோ
என் காதலின் தோல்வி
இருப்பினும்
காதலை நான் காதலிக்கிறேன்
காதலால் வரும் வலியை நேசிக்கிறேன்

நித்யமும் ஆனந்தமாக இருந்து விட்டால்
ஆனந்தத்தின் மகத்துவம் தெரியாமல் போய் விடும்

என்னை பொறுத்த வரையில்
காதலின் வலியும் ஒரு ஆனந்தமே!!!

Wednesday, March 10, 2010

பாவம் என் மனம்

என் கடமையை கண்ணாக கருதி
கண் இமைக்காமல் கடின உழைப்பை
செலுத்தி
வெற்றியினை மட்டும் கண்டு
வாழ்ந்த நான்

இன்று தோல்வியை தவிர ஒன்றும் அறியாதவனாய்
ஆகி விட்டேன்...
காரணம் ?
சொல்லியா தெரிய வேண்டும்
ஆனால் சொன்னால் தான் என் மனம் நிம்மதி அடையும் ..

காதல் எனும் வலையில் என் மனம் சிக்கிக் கொண்டது
நானே இவ்வளவு வேதனை படுகிறேனே
பாவம் என் மனம் எத்தனை வேதனை படும்!!!

என் உயிரும் நீயே என் உடலும் நீயே

என்னை சிரிக்க வைத்ததும் நீ
என்னை அழ வைத்ததும் நீ
என் வாழ்வின் ஒளியும் நீ
என் வாழ்வின் இருட்டும் நீ
என் சிந்தனையும் நீ
என் செயல்களும் நீ
என் உள்ளமும் நீ
என் கண் இமையும் நீ
என் நினைவும் நீ
என் கனவும் நீ
என் உடலும் நீ
என் உயிரும் நீ
எனக்கு எல்லாமே நீ தான்

உனக்கு நான் யாரடி பெண்ணே?